ஜிம்பாப்வே அணி இந்தியா வருவதில் புது சிக்கல்!

ஜிம்பாப்வே அணி இதுவரை இந்தியாவில் வந்து இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடியது கிடையாது. முதன்முறையாக ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலகக்கோப்பை மற்றும் பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் முன்னதாகவே மார்ச் 23-ந்தேதி தொடங்கப்படுகிறது. இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை தொடரை பிப்ரவரி 10-ந்தேதிதான் முடிக்கிறது.

அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிப்ரவரி 24-ந்தேதி முதல் மார்ச் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவுடன் இரண்டு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா தொடருக்கும் ஐபிஎல் தொடருக்கும் இடையே 10 நாட்கள்தான் உள்ளதால் இந்தியா – ஜிம்பாப்வே தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை டெஸ்ட் போட்டி டி20 போட்டியாக மாறலாம் அல்லது தொடர் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools