ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி – இந்திய அணி தங்கம் வென்றது

தென் கொரியா, சாங்வோன் நகரில் ஐ.எஸ்.எஸ்எப்.பின் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றுள்ளது.

இதேபோல், மகளிர் அணி சார்பில் ரைசா தில்லான் வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனி நபர் போட்டியில் இந்திய அணியின் உமாமகேஷ் மதினேனி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

போட்டின் மூன்றாவது நாளான நேற்று வரை இந்தியா 4 தங்கம் வென்றுள்ளது. இதன்மூலம், சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports