X

டெப்லிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்துக்கொள்ளும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

செவித்திறன் இழந்தோருக்கான டெப்லிம்பிக் 2021,  விளையாட்டுப் போட்டிகள் பிரேசில் நாட்டில் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்தி தடகள வீரர்கள் பிரேசில் சென்றுள்ளனர்.

அவர்களுக்கு பிரதமர் மோடி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக  தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

இன்று தொடங்கும் # Deaflympics2021 -ல்  இந்தியா நமது  குழுவை உற்சாகப்படுத்துகிறது. நமது  திறமையான விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

விளையாட்டு போட்டிக்கு புறப்படுவதற்கு  முன் தேசிய போர் நினைவகத்தைப் பார்வையிட்ட அவர்களின் செயல்  என்னை மிகவும் கவர்ந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.