டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி மரியாதை

நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி ராஜபாதையில் தேசிய கொடியை ஏற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்க மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.

விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைகளை சேர்ந்த தளபதிகள் கலந்துக்கொண்டனர்.

தற்போது வீரர் தீர செயல்கள் புரிந்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools