டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய சுப்மன் கில்லை விமர்சித்த முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்த தோல்விக்கு 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணம். குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 23 ரன்களில் அவுட்டான நிலையில் முக்கியமான 2-வது இன்னிங்சில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இந்நிலையில் சுப்மன் கில்லின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

முதல் இன்னிங்சில் சுப்மன் கில் பேட்டிங் செய்த அணுகுமுறையை நாம் பார்த்தோம். அவர் நல்ல ஷாட்டுகளை அடிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அப்படி நீங்கள் ரன்கள் அடிக்க முயற்சிக்கவில்லை எனில் சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி பவுலர்கள் எளிதாக அடிப்பதற்கு தேவையான சுமாரான பந்துகளை உங்களுக்கு வீச மாட்டார்கள்.

நீங்கள் அங்கே உங்களுடைய திறமையை காண்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பவுண்டரிகளை அடிக்க முயற்சிக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டும். எனவே அதில் எப்படி முன்னேறலாம் என்பதை அவர் பார்க்க வேண்டும்.

என்று பார்தீவ் பட்டேல் கூறினார்

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports