தனிமைப்படுத்தப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்

தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க உள்ளது.

கடந்த மாதம் பிக்பாஸ் 4வது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய போதும், இன்னும் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. அதில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்கள் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின்னர் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஓட்டலில் இருந்தபடி நடிகை சிவானியும், நடிகர் ரியோவும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மேலும் வேல்முருகன், ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு உள்ளிட்ட சிலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools