தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரத்தை வெளியிட்ட சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 627 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 640 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் சரிந்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 104 பேருக்கும், ஈரோட்டில் 47 பேருக்கும், செங்கல்பட்டில் 45 பேருக்கும், திருப்பூரில் 43 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 36 பேருக்கும், சேலத்தில் 39 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களில் புதிய தொற்று 10க்கும் குறைவாக பதிவாகி உள்ளது.

மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 37 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 687 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 93 ஆயிரத்து 830  ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,656 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 7,476 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றை கண்டறிவதற்காக கடந்த 24 மணி நேரத்தில் 1,04,531 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools