தமிழகத்தின் 534 கிராமங்களில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை தொடக்கம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை 1.64 லட்சம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்திற்கும், நாட்டில் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.

இதன் மூலம் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கரூர்,மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம் சிவகங்கை, தென்காசி, உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534 கிராமங்களிலும், புதுச்சேரியில் ஒரு கிராமத்திலும் பி.எஸ்.என்.எல்.4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools