X

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் விபரம்!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,596ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 635 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரங்கள் பின்வருமாறு:-

கோயம்புத்தூர் 134, திருப்பூர்- 109, திண்டுக்கல்-76, ஈரோடு- 70, திருநெல்வேலி-62, செங்கல்பட்டு -56, நாமக்கல் -51, திருச்சி-50, தஞ்சாவூர் – 49, திருவள்ளூர் -48, மதுரை-46, நாகப்பட்டினம் – 44, தேனி -43, கரூர் -42, விழுப்புரம் – 40, ராணிப்பேட்டை -39, தென்காசி – 31, திருவாரூர் – 28, தூத்துக்குடி-27, கடலூர் -26, சேலம் – 24, வேலூர் -22, விருதுநகர் -19, திருப்பத்தூர் – 17, கன்னியாகுமரி-16, திருவண்ணாமலை – 12, சிவகங்கை – 12, ராமநாதபுரம் – 11, காஞ்சிபுரம் – 10, நீலகிரி-9, கள்ளக்குறிச்சி- 5, பெரம்பலூர் -5, அரியலூர்-4, புதுக்கோட்டை-1.

Tags: south news