தமிழக சட்டசபை கூட்டம் இன்று முடிவடைந்தது

2022-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் நேற்று முன்தினம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. நேற்று கவர்னர் உரை மீது உறுப்பினர்கள் விவாதம் நடந்தது. இன்று அந்த விவாதத்துக்கு பதில் அளித்தும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பேசினார்.

இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் இன்று முடிவடைந்தது. மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு சட்டசபையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools