திமுக கேள்விக்கு எதிர் கேள்வி எழுப்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் இடையே, வேளாண் மண்டலம் பற்றி பேரவையில் ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை என திமுக உறுப்பினர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிக எம்பிக்களை வைத்துள்ள திமுக, வேளாண் மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி வங்கி தரலாமே? 3வது பெரிய கட்சி திமுக என்கிறீர்களே, நீங்கள் செய்ய வேண்டியதுதானே? என எதிர்கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய துரைமுருகன், நாங்கள் மத்திய அரசுடன் எதிரும் புதிருமாய் உள்ளோம், நீங்கள்தான் இணக்கமாய் உள்ளீர்கள், என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news