திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு ரூ.1500 கோடி வருமான கிடைக்க வாய்ப்பு – தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. உண்டியல் வருமானமும் குறைவாகவே வந்தது. தற்போது கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உண்டியல் வருமானமும் தொடர்ந்து 5 மாதமாக ரூ.100 கோடிக்குமேல் வந்துள்ளது.

ஜூலை மாதத்தில் 23 நாட்களில் ரூ.106.4 கோடி வருமானம் கிடைத்தது. மார்ச் மாதத்தில் ரூ.128 கோடி, ஏப்ரல் மாதம் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் ரூ.19.93 கோடி, ஜூன் மாதத்தில் ரூ.120 கோடி கிடைத்துள்ளது.

பக்தர்கள் அதிகமாக உண்டியலில் காணிக்கை செலுத்துவதால், இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1,500 கோடி உண்டியல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools