துரந்த் கோப்பை கால்பந்து – பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது

131-வது துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக துரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

பெங்களூரு அணி சார்பில் சிவசக்தி (10வது நிமிடம்), பிரேசில் வீரர் ஆலன் கோஸ்டா (61வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மும்பை அணிக்காக அபுயா (30-வது நிமிடம்) மட்டுமே ஒரு கோல் அடிக்க சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி துரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools