துரை தயாநிதியை இரண்டாவது முறையாக நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2வது முறையாக நேரில் சென்று சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், துரை தயாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

முதலமைச்சர் வருகையொட்டி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools