தென்னகத்து போஸ் முத்துராமலிங்கத் தேவரை நன்றியோடு நினைவுகூர்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! “தென்னகத்து போஸ்” பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றி யோடு நினைவுகூர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools