தென் ஆப்பிரிக்க ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்!

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து புது வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குயின்டான் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அப்போது டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

27 வயதாகும் குயின்டான் டி காக் இதுவரை 115 ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி 14 சதங்கள், 24 அரைசதங்களுடன் 4907 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 178 ரன்கள் அடித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news