X

தேர்தலில் தமிழகத்தில் தவறு நடந்த பூத்துகள்! – பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது 46 பூத்களில் தவறு நடந்தது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார். இதில் தேனி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் அடங்கும் எனவும் கூறியுள்ளார்.

இந்த மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடும் என்பதால், விவிபேட் இயந்திரங்கள் பற்றாக்குறை குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும், ஈரோடு மற்றும் தேனியில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: south news