நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 150 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

263 ரன்கள்  முன்னிலைப் பெற்ற போதிலும் இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 29 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 62 ரன்னில் வெளியேறினார். புஜாரா 47 ரன்களும், ஷுப்மான் கில் 47 ரன்களும், விராட் கோலி 36 ரன்களும் சேர்த்தனர்.

அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 41 ரன்கள விளாச, இந்தயா 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டும், ரவீந்திரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தியா 2 இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 539 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 540 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 5  விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 60 ரன்கள் அடித்து அவுட்டானார். ஹென்றி நிக்கோல்ஸ் 36 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்சில் அஷ்வின் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.

நியூஸிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 400 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 5  விக்கெட்கள் அந்த அணிக்கு உள்ளன. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் பாக்கி இருப்பதால் தற்போதைய நிலையில் இந்தியா அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools