நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக் விளையாடுவது சந்தேகம்

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.  3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் நேற்று வலை பயிற்சியில் ஈடுப்பட்டனர். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலை பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைத்தப்படுத்தப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டு முதல் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஜனவரி 2021-க்குப் பிறகு முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools