நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி – இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் பிரைடன் கார்ஸ், லூக் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 14 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தாவித் மலான் 54 ரன்களும், ஹாரி ப்ரூக் 43 ரன்களும் விளாசினர். 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

அதேபோல், தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 49 பந்தில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டிம் டேவிட் 28 பந்தில் 64 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 227 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 15.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 115 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 111 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்கா அணியில் ரீசா ஹென்ரிக்ஸ் அதிகபட்சமாக 56 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் தன்வீர் சங்கா 4 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி நாளை டர்பனில் நடக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports