X

நியூசிலாந்து, இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் – ரசிகர்களை கவலை

நியூசிலாந்து – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் நாளை கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான வெலிங்டன் ஆடுகளம் எப்படி பச்சைபசேல் என்று காட்சியளித்ததோ, அதேபோன்றுதான் கிறிஸ்ட்சர்ச்சின் ஆடுகளமும் காட்சி அளிக்கிறது.

நேற்று பிசிசிஐ கிறிஸ்ட்சர்ச் மைதானத்தின் படத்தை வெளியிட்டது. ஆடுகளத்திற்கும், அவுட் பீல்டு இடத்திற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்தியா அணி விரைவிலேயே தோல்வியடைந்து விடும் என ரசிகர்கள் தங்களை கவலைகளை தெரிவித்துள்ளனர்.

இந்தியா முன்கூட்டியே இந்தியாவுக்கு திரும்ப விமானத்தை முன்பதிவு செய்ய முடியும், ஆடுகளத்தை பார்த்த பிறகு பிரித்வி ஷாவுக்கு காய்ச்சல் வந்து விட்டது போன்று டுவிட்டர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: sports news