நேப்பியர் பாலம்

இயற்கையின் சவால்களை முறியடிக்கும் விதத்தில் மனிதனின் முதல் முயற்சி ஆற்றின் மீது ஒரு பாலம்தான். பாலம் என்பது நகர்ப்புற வடிவமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் கட்டடக்கலை கண்டுபிடிப்பு என்று நாம் கூறலாம். ஆற்றைக் கடந்து, அப்பால் செல்ல மட்டுமே மனிதன் பாலத்தை வடிவமைக்கவில்லை. தனது சுழலை விரிவுபடுத்துவதற்கான மனிதனின் விருப்பமே பாலம்.

ஆனால் ஆற்றின் மீது பாலம் கட்டுவது லேசுப்பட்ட காரியம் இல்லை. நதியானது ஆயிரம் யானை பலம் கொண்டு வலுவாக மட்டுமல்ல, கணிக்க முடியாததாகவும் இருந்தது.

மெட்ராஸை நிறுவுவதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கூவம் நதி ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அது ஓர் இயற்கை அரண் என தெற்கிலிருந்து நகரத்தைப் பாதுகாத்தது. அத்திசையில்தான் சாந்தோமிலிருந்து தொல்லை தரும் போர்த்துக்கீசியர்கள் வசித்து வந்தனர்.

View more at kizhakkutoday.in

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools