பாரபட்சமான பட்ஜெட் – நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முதலமைச்சர்கள்

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இத்தனை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், “தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பாரபட்சமானது, மிகவும் ஆபத்தானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

அதன்படி கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதலவர் ரேவந்த் ரெட்டி, இமலாசப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார்கள். மேலும், இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools