புரெவி புயலால் வேதாரண்யத்தில் 19 செ.மீ மழை பதிவு

வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 19 செ.மீ., தலைஞாயிறில் 14 செ.மீ. மழை பதிவானது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ., குடவாசலில் 10 செ.மீ., திருவாரூரில் 9 செ.மீ., நன்னிலத்தில் 8 செ.மீ. மழை பதிவானது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 12 செ.மீ., தங்கச்சிமடத்தில் 8 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ. மழை பதிவானது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools