புரோ கபடி லீக் – ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி

புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் பொறுப்புடன் விளையாடின. இதனால் முதல் பாதி முடிவில் 15- 14 என ஜெய்ப்பூர் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

ஆனால், இரண்டாவது பாதியில் பாட்னா பைரேட்ஸ் அணியினர் சிறப்பாக ஆடினர். இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 36 – 33 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் ஒன்பதாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த போட்டியில் நூலிழையில் தோற்றாலும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

பரபரப்பாக நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை 42-40 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது பெங்கால் வாரியர்ஸ் அணி.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news