பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் சவுரவ் கங்குலி. இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் அதிகாரியாக பணியாற்றினார். ஜக்மோகன் டால்மியா காலமான பிறகு, பெங்கால் அணியின் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

தற்போது மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. நேற்று பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு கங்குலியைத் தவிர வேறுயாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நாளை நடக்கும் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். கங்குலியுடன் பொருளாளர், இணைச் செயலாளர், செயலாளர்கள் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news