பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆம் ஆத்மி ஏமாற்றுகிறது – பன்சூரி சுவராஜ் தாக்கு

மறைந்த முன்னாள் மத்திய மந்திரி சுஸ்மா சுவராஜ். இவரது மகளான பன்சூரி சுவராஜ் பா.ஜனதா சார்பில் டெல்லி தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இவருக்கு டெல்லியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்தது.

லலித் மோடி பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் அவருக்கு ஆதரவாகவும், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் தற்போது பெண்களிடம் வாக்கு கேட்க வர இருக்கிறார். மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜனதா அவரை திரும்பப்பெற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. அதற்கு பன்சூரி சுவராஜ் தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பு என்ற பெயரில் ஏமாற்றுகிறது. அவர்கள் தான் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பன்சூரி சுவராஜ் கூறுகையில் “பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆம் ஆத்மி ஏமாற்றுகிறது. அவர்களுடைய கட்சி தலைவர்கள் பெண்களுக்கு எதிராக மோசமான குற்றச்செயலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தற்போது மற்றொரு மோசமான நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அக்கட்சி தொண்டரின் 14 வயது மகளுக்கு ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. அந்த தலைவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கேபினெட் மந்திரிகள் இதுபோன்ற பிரச்சனைக்கு எதிராக ஏன் பேசமாட்டோம் என்கிறார்கள்?. குற்றச்சாட்டில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தலைவரை சஸ்பெண்ட் செய்ய பா.ஜனதா வலியுறுத்தியது.

டெல்லி பெண்கள் ஆணையம் சட்த்தின் சட்டப்பிரிவு 10-ன் கீழ் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், டெல்லி பெண்கள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் டெல்லி பெண்கள் ஆணையம் எதையும் செய்யவில்லை” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools