பேருந்து நிலையத்தில் பெண் மீது கொடூர தாக்குதல் – 3 பேர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி இழுத்துச் சென்ற வீடியோ வைரலானதை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணின் ஐந்து மாத கைக்குழந்தை அருகில் தரையில் கிடந்தபோதும் அந்த பெண்ணை தடிகளால் அடித்து, முகத்தில் உதைக்கப்பட்டு இழுத்துச் செல்வது போன்று வீடியோ காட்டுகிறது. பேருந்து நிலையத்தில் உள்ள கேண்டீனில் பால் வாங்கச் சென்ற நடுத்தர வயதுப் பெண். அங்கு ஏதோ வாக்குவாதம் நடந்ததை அடுது்து, அந்த பெண்ணை மூன்று ஆண்கள் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்த வீடியோவில், பெண் தன்னை விட்டுவிடும்படியும், ‘அண்ணா.. அண்ணா’ என்று அழுவதும் காட்டப்பட்டது. சுற்றியிருந்தவர்கள் பெண்ணை அடிக்க வேண்டாம் என்றும் தடுக்க முயன்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து சாகர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் திவாரி விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news