‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகல்!

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் முன்னணி நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள காடுகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த்-சிவா கூட்டணியில் உருவாகும் தலைவர் 168 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ், கால்ஷீட் பிரச்சனை காரணமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமலாபால், பார்த்திபன் ஆகியோரும் இப்படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools