மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது

மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் ரெயில் நிலையம் அருகே இன்று காலை உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. அந்த ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. நல்லவேளையாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் அங்கு ரெயில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools