மனைவிக்காக படம் தயாரிக்கும் ஆர்யா!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா, கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை சூர்யா தனது 2டி பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ஆர்யாவும் அதே பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கும் ஜோதிகா போன்று கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளதாம். அதனால் மனைவிக்காக தானே ஒரு படம் தயாரிக்க ஆர்யா முடிவு செய்துள்ளாராம். இதற்காக சில இளம் இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம்.

ஆர்யாவின் மனைவி சாயிஷா, வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆர்யாவுடன் டெடி படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் 12-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools