மன்னர் வளைகுடாவில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

மன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த புரெவி புயல், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு, மாலத்தீவு, குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools