மருத்துவ சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்லும் விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவர், தே.மு.தி.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2005-ம் ஆண்டு தே.மு.தி.க. தொடங்கப்பட்ட பின்னர் 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறோம். ‘இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே’ என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம்.

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போதுதான் குறைந்து வரும் நிலையில், பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம்.

கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை-எளிய மக்களுக்கு செய்து பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். மேலும் உடல்நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools