மலோர்கா ஓபன் டென்னிஸ் – இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

மலோர்கா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்தது.

இதன் ஆண்கள் பிரிவின் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, தென் ஆப்பிரிக்காவின் லாய்ட் ஹாரிஸ் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ் – ஆஸ்திரியாவின் பிலிப் ஆஸ்வால்ட் ஜோடியுடன் மோதியது.

இதில், யுகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. யுகி பாம்ப்ரி ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கைப்பற்றிய முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports