X

மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்த மேத்யூஸ்!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டருமான மேத்யூஸ் இடம் பிடித்துள்ளார்.

இவர் இலங்கை டி20 அணியில் கடந்த 16 மாதங்களுக்கு முன் இடம் பிடித்திருந்தார். அதன்பின் தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளார். மேத்யூஸ் கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2018 ஆகஸ்ட் மாதம் விளையாடியிருந்தார்.

இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. லசித் மலிங்கா (கேப்டன்), 2. தனுஷ்கா குணதிலகா, 3. அவிஷ்கா பெர்னாண்டோ, 4. மேத்யூஸ், 5. தசுன் ஷனகா, 6. குசால் பெரேரா, 7. நிரோஷன் டிக்வெல்லா, 8. தனஞ்ஜெயா டி சில்வா, 9. இசுரு உதானா. 10. பனுகா ராஜபக்சே, 11. ஒஷாடாபெர்னாண்டோ, 12. ஹசரங்கா, 13. லஹிரு குமாரா, 14. குசால் மெண்டிஸ், 15. சண்டகன், 16. கசுன் ரஜிதா.

Tags: sports news