மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்கும் அதிதி ராவ்

ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ப்ரஜாபதி’. மம்மூட்டி ஹீரோவாக நடித்த இந்த படத்தில், ஹீரோயினாக அதிதி ராவ் அறிமுகமானார். 2006-ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீசானது. அதன்பிறகு, ‘காற்று வெளியிடை’, ‘பத்மாவத்’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘சம்மோஹனம்’ என ஏராளமான தமிழ், இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார்.

இந்த நிலையில், 13 ஆண்டுகள் கழித்து மறுபடியும் மலையாள படம் ஒன்றில் நடிக்கிறார் அதிதி ராவ். ஜெயசூர்யா ஜோடியாக அவர் நடிக்கிறார். ‘சூபியும் சுஜாதயும்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, நரணிபுழா ஷாநவாஸ் இயக்குகிறார். மியூசிக்கல் ரொமான்டிக் படமாக உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு இன்று தொடங்க இருக்கிறது.

தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘சைக்கோ’ படத்தில் நடித்துள்ளார் அதிதி ராவ். இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இதுதவிர நானி ஜோடியாக ‘வி’ என்ற தெலுங்குப் படத்திலும், விஜய் சேதுபதி ஜோடியாக ‘துக்ளக் தர்பார்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்து வருகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools