முன்னணி வீரர்களை ஏலம் எடுக்க புதிய ஐபிஎல் அணிகள் ஆர்வம்

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிக்காக ஏற்கனவே உள்ள 8 அணிகளும் மொத்தம் 27 வீரர்களை தக்க வைத்தது. புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், சுப்மன்கில் உள்ளிட்ட வீரர்களை எடுக்க புதிய அணிகள் ஆர்வத்துடன் உள்ளன. கடந்த சீசனில் ராகுல் பஞ்சாப் அணியிலும், அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி அணியிலும், ரெய்னா சென்னை அணியிலும், சுப்மன்கில் கொல்கத்தா அணியிலும் விளையாடினார்கள்.

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இந்த மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools