ரவி பிஷ்னோய், குயிண்டன் டி காக் சிறப்பான செயல்பட்டனர் – லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல்

ஐ.பி.எல்.கிரிக்கெட்போட்டியில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டி காக், லீவிஸ் அதிரடி ஆட்டம் காரணமாக லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், இளம் சூழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், சென்னை அணிக்கு எதிராக 24 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றியதை பாராட்டினார். பிஷ்னோய் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் இதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ராகுல் கூறினார்.

இதேபோல் ஆயுஷ் படோனி பேட்டிங் தனித்துவமானது என்றும், அவர் இந்தியாவின் மிகச்சிறந்த கண்டு பிடிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

குயின்டன் டி காக் மற்றும் லூயிஸ் ஆகியோர் சிறந்த பார்மில் இருப்பதாகவும், இருவரின் வலது மற்றும் இடது கை பேட்டிங் அணிக்கு உதவியதாக இருந்நதாகவும் லக்னோ கேப்டன் ராகுல் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools