ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வேண்டும் என்பது அனைவருடைய விருப்பம் – அம்பிகா சோனி

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவரான அம்பிகா சோனி கூறுகையில் ‘‘காங்கிரஸ் தலைவராக வேண்டுமா? வேண்டாமா?  என்பதை ராகுல் காந்தி முடிவுக்கே விட்டுவிட  எல்லோருமே ஒருமித்த கருத்தோடு ஏற்றுக்கொண்டனர். ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என ஒவ்வொருவரும் வலியுறுத்தினர்.

ஜி-23 குறித்து கூட்டத்தில் குறிப்பிடவில்லை. அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் பிரிவுகளாக பிரிக்கப்படவில்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி ஆக வேண்டும் என்பது அனைத்து தலைவர்களுடைய கருத்தாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைமுறை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாத்ம தொடங்கும்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools