ராஜஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் பகுதியில் இன்று அதிகாலை 5.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இன்று அதிகாலை மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools