ராமர் கோவில் திறப்பு விழா இந்தியாவின் மற்றொரு தீபாவளி – ஐ.நா சபை தலைவர் வாழ்த்து

ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், 5 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இன்று முதல் ஜன.26 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்ட ஐ.நா தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், “இந்தியா இரண்டாவது தீபாவளியை கொண்டாடும் இந்த நன்நாளில் டெல்லி-க்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இனிவரும் நாட்களில் அமைதி, முன்னேற்றம், செழிப்பு மற்றும் நிலைத்தன்மை பற்றிய பயனுள்ள விவாதங்களை எதிர்பார்க்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.

5 நாள் பயணமாக இந்தியா வந்த ஐ.நா தலைவர், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு மும்பை செல்கிறார். அங்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். மேலும் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, பலதரப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

ஐ.நா–இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news