லஞ்சம் கேட்ட விவகாரம்! – இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் கைது

இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிலுவையில் உள்ள ரூ.19 லட்சம் ‘பில்’ தொகையை வழங்க 3 சதவீதம் கமிஷன் கேட்டதாக சி.பி.ஐ. யிடம் புகார் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய தலைமை அலுவலகத்துக்கு நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென்று சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். டெல்லி லோதி சாலையில் உள்ள ஒரு அலுவலகத்திலும் சோதனை போட்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குனர் எஸ்.கே.சர்மா, இளநிலை கணக்கு அதிகாரி ஹரிந்தர் பிரசாத், சூப்பர் வைசர் லலித் ஜாலி, மற்றொரு அதிகாரியான வி.கே.சர்மா மற்றும் தனியார் நிறுவன காண்டிராக்டர் மன்தீப் அகுஜா, அவரது அலுவலக ஊழியர் யூனுஸ் ஆகிய 6 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news