X

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விக்ரம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் கைவசம் கோப்ரா, துருவ நட்சத்திரம், சீயான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உள்ளன். இதில் கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சீயான் 60’, மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதனிடையே நடிகர் விக்ரமின் 61-வது படத்தை ‘கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், நடிகர் விக்ரம் தரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்த பின்னரே அடுத்த படத்தின் இயக்குனரை விக்ரம் தேர்வு செய்வார் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.