விஜயகாந்துக்காக காத்திருக்கும் திமுக கூட்டணி?

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகம் எடுத்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. நிலை என்ன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்தை இழுக்க அ.தி.மு.க. அணியும், தி.மு.க. கூட்டணியும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால் தே.மு.தி.க. எந்த கூட்டணி என்பதை முடிவு செய்யாமல் காலம் கடத்துவதால் அவர்களது முடிவுக்காக பிற கட்சிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கான இடங்கள் மட்டுமே உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டு கட்சிகள், ம.தி.மு.க.வுக்கு எத்தனை இடம் என்பது உறுதியாகவில்லை. தே.மு.தி.க. வந்தால் அதற்கான சீட்டை உறுதிப்படுத்திவிட்டு மற்ற கட்சிகளுக்கான சீட்டை முடிவு செய்யலாம் என தி.மு.க. தலைமை நினைக்கிறது. விஜயகாந்த் முடிவுக்காக திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட்டு கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரும் காத்திருக்கின்றனர்.

பாராளுமன்ற தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம் என்று தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூறிவிட்டனர். நமது கட்சியில் இருந்து இதுவரை ஒருவர் கூட பாராளுமன்றத்துக்கு சென்றது இல்லை. அதற்கான சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அதனை இழக்க வேண்டாம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

கூட்டணி வி‌ஷயத்தில் சிலர் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகவும் சிலர் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகவும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். அவர்களிடம் சுதீஷ் கூறும்போது,

‘தி.மு.க கூட்டணியில் இருந்து ஸ்டாலினும் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பேசி வருகிறார்கள். எனவே மற்றவர்கள் நம் கட்சியை பற்றி பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூறி இருக்கிறார்.

இப்போதைக்கு தி.மு.க கூட்டணியில் 6 சீட்டுகள் வரையும் அ.தி.மு.க கூட்டணியில் 5 சீட்டுகள் வரையிலும் இறங்கி வந்துள்ளனர். தே.மு.தி.க.வுக்கு 6 சீட்டுகள் கொடுத்தால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு கொடுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 2 குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது’

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools