வேங்கைவயல் விவகாரம் – டி.என்.ஏ ஒத்துப்போகவில்லை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிக்குள் கடந்த 2022-ம் ஆண்டு டிச.26-ந் தேதி மனித மலம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தினை முதலில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குடிநீர் தொட்டி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. தொடர்ச்சியாக அங்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை முத்துக்காடு, இறையூர், காவிரி நகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 31 நபர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் ஒருவர் குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இவர்களில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரின் டி.என்.ஏ. முடிவுகள் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் இன்று சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் கலந்த மனிதக்கழிவு மாதிரியும், 31 பேரிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியும் ஒத்துப்போகவில்லை என்று சிபிசிஐடி எஸ்.பி. தில்லை நடராஜன் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து 10 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news