வேங்கைவயல் விவகாரம் – புதிய விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. கல்பனா விசாரணையை தொடங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக நேரடி விசாரணை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல் நிலைநீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் 147 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் டி.என்.ஏ பரிசோதனை உட்பட பல வகைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சி.பி.சி.ஐ.டி-யும் பல மாதங்களாகியும் குற்றவாளிகளை கண்டு பிடிக்காமல் மந்தமான விசாரணை நடத்திவருவதாக, அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இறுதியாக வேங்கைவயல் மற்றும் இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

இதனிடையே இதுநாள் வரை இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. பால் பாண்டி விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கல்பனா புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

புதிய விசாரணை அதிகாரி கல்பனா இன்று தனது விசாரணையை தொடங்கினார். சம்பவம் நடைபெற்ற குடிநீர் தொட்டி மற்றும் வேங்கை வயல் கிராமத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news