வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது – அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடந்தது. அதிமுக செயற்குழுவில் சசிகலா பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.

வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது. வேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools