ஸ்மித்துக்கு பந்து வீசும் சூழ்நிலை அமையாதது மகிழ்ச்சி – பேட் கம்மின்ஸ்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தும் ஒருவராக திகழ்கிறார். இவருக்கு பந்து வீச பெரும்பாலான பவுலர்கள் விரும்புவதில்லை. இவரை எளிதில் வீழ்த்துவது கடினம்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக பேட் கம்மின்ஸ் திகழ்கிறார். வேகம், பவுன்சர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைக்கிறார். இருந்தாலும் ஒரே அணியில் விளையாடுவதால் ஸ்மித்திற்கு பந்து வீசும் சூழ்நிலை அமையவில்லை. இது மகிழ்ச்சியானது என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘கடந்த வாரம் கேன் வில்லியம்சன் இரட்ரை சதம் அடித்ததை பார்த்தேன். ஆகவே, நியூசிலாந்தில் நான் விளையாடவில்லை என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் விளையாட்டு என வரும்போது எதிரியாக நினைக்கும் எதிரணி பேட்ஸ்மேனை விட சற்று கூடுதல் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்வீர்கள். பேட்ஸ்மேன் ஒருவர் ஆடுகளத்தில் விளையாட வரும் இதை நீங்கள் உணர்வீர்கள்.

இது ஒட்டுமொத்தமாக எப்படி பாதிக்கும் என்பது குறித்து நான் மிகப்பெரிய அளவில் சிந்தித்தது கிடையாது. நான் குழந்தை பருவத்தில் இருந்து வளரும்போது, டி.வி. ஆன் செய்தால், இந்த வகையிலான போட்டி நடக்கும்.

லாராவிற்கு மெக்ராத் பவுலிங் போடுவது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்பதால் நீங்கள் பார்ப்பீர்கள். இதுபோன்ற தருணத்தை நான் விரும்புகிறேன். இந்த சம்மர் சீசனில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools