ஹெல்மட் அணியவில்லை என்றால் மதுபானம் கிடையாது!

மத்திய பிரதேசத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை அந்த மாநில அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று முன்பு அறிவித்து இருந்தனர். ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் அங்குள்ள ஜபுல்பூர் நகரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools