X

11ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வரும் 11ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 11 முதல் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை முதல் நாகை வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நவம்பர் மாத பிற்பகுதியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டப்பிடாரம், வீரகனூர், செங்கோட்டையில் தலா 4 செ.மீ., கூடலூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் இன்று வரை மழை பொழிவு இயல்பைவிட 44 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.